அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே? ஆவேசம் அடைந்த சோனியா காந்தி!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே என்று செய்தியாளர்களிடம் முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மூன்றாவது நாளாக கலவரம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து சற்றுமுன் செய்தியாளர்களைச் சோனியா காந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி கலவரம் பாஜகவின் திட்டமிட்ட சதி. பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சு காரணமாகவே வன்முறை ஏற்பட்டுள்ளது. வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
டெல்லியின் முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்கிறார்? எங்கே இருக்கின்றார் என்றே தெரியவில்லை என்றும் சோனியா காந்தி ஆவேசமாக கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.