அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசின் உத்தரவு

அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்கள் போல அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் யாரும் அந்த அடையாள அட்டையை அணிவதில்லை என்றும் கூறப்பட்டது

இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது

இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு ஊழியர்கள் யாரும் அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் கூறப்பட்டது

இதனை அடுத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கை ஒன்றில் அனைத்து அரசு ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும் இல்லையேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply