அரசியல் வேண்டாம்: சிரஞ்சீவியின் அறிவுரையை ஏற்று கொள்வதாக கமல் அறிவிப்பு
சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சிரஞ்சீவி, ’கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல’ என்று கூறியிருந்தார்.
இந்த அறிவுரை குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன், ‘தேர்தலில் வெற்றி என்பதை விட பயிற்சியும், முனைப்பும் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது. இருப்பினும் நண்பராக அவரின் அறிவுரை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட கமல் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அதன்பின்னர் நடந்த வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலிலும், வரும் அக்டோபர் 21ல் நடைபெறும் இடைத்தேர்தலிலும் கமல் கட்சி போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.