அரசால் மட்டும் செய்ய முடியாது! மழை நீர் சேகரிப்பில் மக்களுக்கும் அக்கறை வேண்டும்: அமைச்சர்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மழைநீர் சேகரிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான இந்தத் திட்டத்தை நனவாக்குவதில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு முயற்சித்து வருகிறது
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் வேலுமணி இன்று பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோள் ஒன்றில், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தமிழக மக்கள் அனைவரும் மழை நீரை சேமிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
அரசோ, ஒரு அமைப்போ முழுமையாக இதனை செயல்படுத்த முடியாது என்றும் ஒவ்வொரு மக்களும் இதில் ஆர்வம் காட்டினால் தான் முழுமையான மழை நீரை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.