shadow

அம்பத்தி ராயுடு பந்துவீச்சை குறை கூறிய ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் இந்திய அணி வீரர்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை ஐசிசி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அம்பாத்தி ராயுடு 2 ஓவர்கள் பந்துவீசி 13 ரன் மட்டுமே வழங்கியிருந்தார். போட்டி முடிந்த பின்னர் நடுவர்கள் அவது பந்துவீச்சை சோதனை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர். எனினும், அவர் நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ந்து பந்துவீசலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் அம்பத்தி ராயுடு அரிதாகவே பந்துவீச பயன்படுத்தப்பட்டு வருகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை அவர் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply