அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இன்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.விஜயபாஸ்கருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொலைபேசியில் இன்று மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் பொய்யான தகவல் என்று தெரியவந்தது
இதனையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.