அமெரிக்க அதிபருக்கு பருத்தியில் ஜிப்பா தைத்த தையல் கலைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் திங்களன்று இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் பருத்தியால் ஆன உடையை தைத்து டெல்லிக்கு அனுப்பி உள்ளார்

இந்த உடையை அமெரிக்க அதிபருக்கு தான் பரிசாக வழங்கி உள்ளதாகவும் இந்த உடையை அணிந்தால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

வரும் திங்கட்கிழமை இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் இந்த உடையை அணிவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் தற்போது இந்த உடை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply