உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பு அடைந்த அமெரிக்காவில் நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

நியூயார்க் நகரைச் சேர்ந்த சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்ஸ்க்கு முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல்

நேற்று அமெரிக்க நேரப்படி, காலை 9.30 மணிக்கு போடப்பட்டதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கூறிய நர்ஸ் சான்ட்ராலின்ஸ்சே, பிற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதைப் போலவே இதுவும் இருந்ததாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது எந்த வேறுபாட்டையும் உணரவில்லைஎனவும் இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்

Leave a Reply