shadow

அன்புச்செழியன் கடனுக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் வெற்றி பெறுவாரோ தோல்வி அடைவாரோ அது இரண்டாம் பட்சம். அரசியலுக்கு வருகிறேன் என வருடக்கணக்கில் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் துணிச்சலாக களமிறங்கியதே பெரிய விஷயம் என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் அன்புச்செழியனிடம் கோடிக்கணக்கில் கடன் பட்டிருக்கும் விஷால், ஒருவேளை தான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த கடனை திருப்பி கேட்க மாட்டார் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

மேலும் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக, திமுக வாக்குகளை கலைத்தால், விஷாலின் கடன் அடைக்கப்படும் என தினகரன் வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இன்னொரு வதந்தி பரவி வருகிறது. இதில் எது உண்மை என்பது விஷாலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

Leave a Reply