அத்திவரதர் பக்தர்கள் பாய்ந்த மின்சாரம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

அத்திவரதர் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காட்சி அளித்து வரும் நிலையில் இன்று வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்தது

இந்த நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை அறிந்து உடனே சுதாரித்த காவல்துறை அதிகாரி ஒருவர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தார். இதனால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply