அதிமுகவினர் இல்லங்களிலும் ஆட்டத்தை ஆரம்பித்த ஐடி அதிகாரிகள்
திமுகவினர்கள் வீடுகளில் மட்டுமே ஐடி சோதனை நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று அதிமுக பிரமுகர்கள் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பொன்னேரியில் அதிமுக பிரமுகர் பானுபிரசாத், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாலரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளராக உள்ள பலராமன் ஆதரவாளர்கள் ஆகியோர்கள் இல்லங்களில் பத்து பேர் கொண்ட ஐடி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதிமுகவினர் இல்லங்களில் நடந்து வரும் சோதனையை வெறும் கண்துடைப்பு என்று திமுகவினர் விமர்சனம் செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.