shadow

நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜிம்பாவே

ervineநியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாவே நாட்டிற்கு சென்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாவே அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய அந்த அணி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டெய்லர் 112 ரன்களும், வில்லியம்சர் 97 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விரட்டிய ஜிம்பாவே அணி, 49 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 304 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எர்வின் 130 ரன்களும், மாஸக்ட்ஜா 84 ரன்களும் எடுத்தனர்.  எர்வின் ஆட்டநாயகான தேர்வு செய்யபட்டார். மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ஜிம்பாவே 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணி பெற்றுள்ளது.

Leave a Reply