shadow

clarkeஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாவே ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து ஜிம்பாவே அதிர்ச்சி கொடுத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிம்பாவே அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் ஜிம்பாவே அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் ஜிம்பாவே அணியுடன் வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியா, நேற்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஜிம்பாவே அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜிம்பாவே அணியின் கேப்டன் சிகும்பரா அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply