shadow

பாகிஸ்தான் ஆடைகளை  விற்பனை செய்வதா? மும்பை ஆடை மையத்திற்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்தாக்கரே ஆதரவாளர்கள்

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்து வரும் ஸ்பானிஷ் ஆடை விற்பனை மையமான ஷாராவுக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் மும்பையில் இயங்கி வந்த ஷாரா ஆடை விற்பனை மையத்திற்கு நேற்று திடீரென புகுந்து அங்கு பாகிஸ்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதை கண்டித்தனர்.

ராஜ்தாக்கரே தலையிலான இந்த அமைப்பு இந்தியாவிற்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வரும் பாகிஸ்தானின் ஆடைகளை எப்படி விற்பனைசெய்யலாம் அந்த ஸ்பானிஷ் ஆடை விற்பனை மையத்தின் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். தங்களது எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் ஆடைகளை விற்பனை செய்தால் கடை மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply