shadow

mamtha nephewமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை பொதுக்கூட்ட மேடையில் ஒருவர் கன்னத்தில் பளார் என அறைந்ததால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஸ்வாம்ஸ்சேவா சங்கத்தின் உறுப்பினரும், அகில பாரத விதார்த்தி பரிஷத் என்ற அமைப்பில் இருப்பவருமான தேபாஷி என்பவர் நேற்று பொதுக்கூட்ட மேடை ஒன்றில் மேற்கு வங்க முதல்வரின் மருமகனை கன்னத்தில் முகத்திலும் சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த திரிணாமுல் கட்சி தொண்டர்கள் தேபாஷியை அடித்து உதைத்தனர். அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் தேபாஷியின் பெற்றோர்கள், அபிஷேக் பானர்ஜியை சந்தித்து தங்களது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply