அழைத்து செல்ல ஆம்புலன்சில் வந்த இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் உள்ள ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிவாஜித் என்பவர் காதலித்தார்.

இன்ஸ்டாகிராமில் இருவரும் தங்கள் காதலை வளர்த்த நிலையில் திடீரென தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு காதலி, சிவாஜித்திடம் கூறியுள்ளதாக தெரிகிறது

இதனையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு கோழிக்கோடுக்கு சிவாஜித் சென்றுள்ளார். ஆனால் அதனை மடக்கிய போலீசார் அவர்கள் மீது சந்தேகமடைந்த விசாரணை செய்தபோது உண்மை தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் சிவாஜித் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலியை அழைத்துச் சென்ற அழைத்துச் செல்ல முடிவு செய்த காதலன் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply