கரூர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் புரோட்டா சாப்பிட்டதால் மூச்சு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ராதிகா என்ற 17 வயது இளம்பெண், நேற்று வேலை முடிந்தது இரவு தனது தோழிகளுடன் புரோட்டா சாப்பிட்டுள்ளார். திடீரென அவரது தொண்டையில் புரோட்டா சிக்கிக்கொண்டதால் அவரால் மூச்சுவிட முடியவில்லை.
மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது தோழிகள் அழைத்து சென்றனர். ஆனால் ராதிகாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர்
17 வயதான ராதிகா தனது தோழிகளுடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்தார். இவர் பெற்றோர் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கரையாம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தனர். அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராதிகாவின் பெற்றோர் அவருடைய பிணத்தை கட்டிப்பிடித்து அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
புரோட்டாவின் ஒருசிறு பகுதி தொண்டையில் சிக்கிக்கொண்டதால் ராதிகாவில் மூச்சுவிட முடியவில்லை என்றும் அதனால் அவருடைய உயிர் பிரிந்ததாகவும் மருத்துவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.