shadow

காவல்நிலையம் சென்று திடீரென ஆய்வு செய்த உ.பி. முதல்வர். பெரும் பரபரப்பு

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதல்வரே திடீரென காவல்நிலையம் சென்று அங்கு பணிகள் சரியாக நடக்கின்றதா? என்று ஆய்வு செய்துள்ளார். அவர்தான் சமீபத்தில் பதவியேற்ற உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

சற்றுமுன்னர் உ.பி மாநிலத்தில் உள்ள ஹஸ்ரத்கஞ் என்ற காவல் நிலையத்திற்கு அதிகாரிகளுடன் வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள ஃபைல்களை ஆய்வு செய்தார்.

முதல்வரின் வருகையை சற்றும் எதிர்பாராத அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபோன்ற அதிரடிகள் இன்னும் தொடரும் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply