யெஸ் வங்கி கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 18 முதல் வழக்கம்போல் செயல்படும்

யெஸ் வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு மார்ச் 18ம் தேதியுடன் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் 18ம் தேதி முதல் யெஸ் வங்கி வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியை மீட்க எஸ்பிஐ, ஐசிசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளது என்பதும் இதனால் அந்த வங்கி தற்போது நஷ்டத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னதாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply