shadow

yennai arindhaalஅஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கும் நிலையில் அந்த படத்தின் காட்சிகளின் நேரம் குறித்த தகவல்கள் அஜீத் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா, கத்தி, ஆகிய திரைப்படங்கள் அதிகாலை 3 மணிக்கே திரையிட்டு ரசிகர்களை தியேட்டர் அதிபர்கள் குஷிப்படுத்தி வந்தனர். இதையெல்லாம் தாண்டி ரஜினியின் லிங்கா, நள்ளிரவு 12.30 மணிக்கே திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1ED4PFb” standard=”//www.youtube.com/v/2dAFphWxkn4?fs=1″ vars=”ytid=2dAFphWxkn4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9849″ /]

ஆனால் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை நள்ளிரவில் திரையிட வேண்டாம் என சென்னை தியேட்டர் அதிபர்களை சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் சென்னையில் அசோக் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த காரணமாக காவல்துறை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னேற்பாடு இது என்று கூறப்படுகிறது. இருப்பினும் முதல்காட்சி அதிகாலை 5 மணிக்கு ஒருசில தியேட்டர்களில் திரையிடப்படலாம் என தெரிகிறது. இதனால் ‘தல’ ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும், பாதுகாப்பு கருதி காவல்துறையினர்களின் வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பதாக முடிவு செய்துள்ளனர்.