கோலிவுட்டில் தற்போது எப்.எம் வானொலியில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தும் கலாச்சாரம் பரவி வருகிறது.
முதலில் சிறிய பட்ஜெட் படங்களின் பாடல்கள் மட்டுமே எப்.எம் வானொலியில் விழா நடத்தி வந்த நிலையில் தற்போது முதல்முறையாக பிரமாண்டமான படம் ஒன்றின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு முன்னணி எப்.எம் வானொலியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும் இதுவரை எந்த ஒரு திரைப்படத்தின் ஆரம்ப விழாவுக்கோ, புரமோஷன் விழாவுக்கோ அல்லது பாடல் வெளியீட்டு விழாவுக்கொ வருகை தராத அஜீத், எப்.எம் வானொலியில் நடக்கவுள்ள பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்விக்கு பின்னர் கண்டிப்பாக ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய நிலையில் உள்ள கவுதம் மேனன் இந்த படத்தை வெறித்தனமாக இயக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கவுதமேனனின் மாஜிக் எடுபடுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.