உலகக்கோப்பை கபடி: ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் நேற்று விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் பாதியில் இந்திய அணி பின்தங்கியிருந்தாலும் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி 38-29 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
வெற்றி பெற்ற கபடி அணிக்கு இந்திய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கபடியை கண்டுபிடித்த இந்தியா எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் கிரிகெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் ஒருமுறை கூற சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.