உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆரம்பம் முதலே சொதப்பலாக இருந்தது. ஆட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவர்களில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி, அதன் பின்னர் நிதானமாக விளையாடியும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. மிஸ்பா உல் ஹக் 34 ரன்களும், ஹரிஸ் சோஹேல் 41 ரன்களும், சோஹேப் மக்சூட் 29 ரன்களும் எடுத்தனர்.
எனினும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் ஹசல்வுட் 4 விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் மற்றும் மாக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஜான்சன் மற்றும் பால்க்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அரையிறுதிக்கு பெற 214 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.