இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த சரித்திரம் இல்லை. அந்த வெற்றி சரித்திரம் உலகக்கோப்பை 20 ஓவர்கள் போட்டியிலும் நேற்று தொடர்ந்தது.
நேற்று நடந்த விறுவிறுப்பான உலக்கோப்பை 20 ஓவர்கள் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சாதனை படைத்தது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்களும், தவான் 30 ரன்களும், விரோத் கோஹ்லி 36 ரன்களும், யுவராஜ் சிங் 1 ரன்னும், சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்றுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.