shadow

cricketஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் நேற்று ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் மூலம் விற்பனை ஆனது. இதில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் 12 நிமிடத்தில் விற்று தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியை பார்க்க உலகெங்கிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.

இந்த மைதானத்தில் மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசித்து பார்க்கலாம். இந்த 50 ஆயிரம் டிக்கெட்டுக்களும்  12 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது.

தற்போது, இந்த போட்டிக்கான வெளிநாட்டுப் பயணி, மற்றும் வி.ஐ.பிக்களுக்கான டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சி உள்ளன.

Leave a Reply