shadow

f8b388f1-e881-41a1-a45d-980143fac16d_S_secvpf

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன. 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை இது.  

வைட்டமின் டி பரிசோதனை எப்பொழுது: எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர்.

ஏன்: இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும். 80 முதல் 90 சதவீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் (Osteoporosis) அல்ல இது.

எப்படி: இரத்தப் பரிசோதனை மூலமாக.

வைட்டமின் பி12 பரிசோதனை எப்பொழுது: புஜங்கள் மற்றும் கால்களில் உணர்வற்ற நிலையையோ அல்லது குறுகுறுப்பாகவோ இருக்கும் போதும், பலவீனமாக இருப்பதை உணரும் போதும் மற்றும் அனீமியாவினால் சமநிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையை செய்வது நலம். 

Leave a Reply