ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரது மொபைலில் பேஸ்புக் இணையதளத்தை பார்த்துக்கொண்டே சென்ற அவர் பாலத்தின் தடுப்பை தாண்டி கடலில் விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் அவர் நீரில் தவிக்க, இதனை நேரில் பார்த்த நபர் ஒருவர் உதவிக்காக அழைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் ஓடி வந்து கடலில் தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். அவரை காப்பாற்றிய போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.

Leave a Reply