shadow

கணவரின் ஈமச்சடங்கிற்காக பிச்சை எடுத்த பெண்

சித்தூர் அருகே கணவரின் இறுதிச்சடங்கு நடத்த பணம் இல்லாததால் பிச்சை எடுத்த ஒரு பெண்ணின் அவலம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது

சித்தூர் அருகே ஈடிகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த பாபுசாயபு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை எடுத்து செல்லுமாறு அவருடைய மனைவியிடம் தெரிவித்தனர். கணவரின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்லவும், இறுதிச்சடங்கு செய்யவும் தன்னிடம் பணம் இல்லை என்று கண்ணீருடன் அவர் கதறினார்.

உடனே வேறு வழியில்லாமல் தன்னுடைய நிலையை விளக்கி மருத்துவமனை ஊழியர்களிடமும், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் அவர் பிச்சை எடுக்க தொடங்கினார். அவருடைய கண்ணீரை பார்த்து மருத்துவமனையில் இருந்த பலர் அவருக்கு பண உதவி செய்தனர். பின்னர் அந்த தொகையை வைத்து ஆட்டோ ஒன்றில் தனது கணவரின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று ஈமச்சடங்கு செய்தார்.

இறுதிச் சடங்கை கூட செய்ய பணம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீரோடு பெண் பிச்சை எடுத்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply