எஸ்கலேட்டரில் இருந்து 40 அடி கீழே விழுந்த கைக்குழந்தை. அதிர்ச்சி வீடியோ
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் எஸ்கலேட்டரில் கைக்குழந்தையுடன் இறங்கி வந்த போது அவருடைய உடை எஸ்கலேட்டரில் சிக்கியதால் நிலை தடுமாறி கையில் வைத்திருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டார்.
இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த அந்த குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பரிதாபமாக அந்த குழந்தை மரணம் அடைந்தது.
இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கைக்குழந்தையுடன் செல்லும் பெண்கள் சரியான உடையை தேர்வு செய்ய வேண்டும் என்று பலர் அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
//www.youtube.com/watch?v=UsruAFUUDQ4
Leave a Reply
You must be logged in to post a comment.