shadow

கார் விபத்தில் சிக்கிய பெண் செய்தியாளர்: பிறந்த நாள் அன்று இறந்த சோகம்

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ஷாலினி என்ற இளம்பெண் நேற்று திண்டுக்கல் கொடைரோடு அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி என்ற பகுதியில் உள்ள தனது சக ஊழியர் அங்கையற்கரசி என்பவரை பார்ப்பதற்காக ஷாலினி தனது நண்பர்களுடன் காரில் சென்றார். அங்கையற்கரசியை பார்த்துவிட்டு சென்னை திரும்பிய போது அவர்கள் வந்த கார் பொட்டிகுளம் என்ற பகுதி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷாலினி ஷாலினி மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றவர்கள் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஷாலினிக்கு பிறந்த நாள் என்பதும் தனது பிறந்த நாளன்றே அவர் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார் என்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply