shadow

12 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெஹா னாபாத் என்ற பகுதியின் அந்த் ரயான் கிராமத்தை சேர்ந்த தாதா சாந்தி ஸ்வரூப். இவர் அந்த பகுதி மக்களை மிரட்டி கொடுமைப்படுத்துவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும் இதை தட்டிக்கேட்ட அவர்களின் குடிசையைச் சேதப்படுத்தி அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  

இதனால் ஆத்திரமடைந்த தாதா சாந்தி ஸ்வரூப் கணவன் மனைவி இரு வரையும் அவரது கூட்டாளிகளும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி கணவன் மனைவி இருவரின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஊரைச் சுற்றி வர செய்து அவமானப்படுத்தியுள்ளனர். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கூறி பாதிக்கப் பட்ட தம்பதியினரும் ஊர் மக்களும் ஜெனாபாத் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply