shadow

பெண் விடுதலைப்புலி தமிழினி மரணம். இலங்கை தமிழ் தலைவர்கள் இரங்கல்
thamilini
தமிழிழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக பதவி வகித்த, பெண் விடுதலைப்புலி சிவகாமி ஜெயக்குமரன் என்ற தமிழினி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழிழ விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழினி,  2009ஆம் ஆண்டு மே மாதம்வரை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தனக்கு மேலாக நேசித்து ஒரு போராளியாக வாழ்ந்து வந்தார். நேற்று மரணம் அடைந்த தமிழினிக்கு விடுதலைப்புலிகள் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழினி மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“எம் மக்களுக்காக அல்லும் பகலும் இயங்கி கொண்டிருந்த எங்கள் தமிழினியின் இழப்பு எங்களோடு அன்றாடம் பழகிய ஒருவரை இழந்து விட்டோம் என்பன போன்ற உணர்வலைகளை தோற்றுவிக்கிறது”

பெண் போராளிகளிடையே தன்னம்பிக்கையை வளர்த்து உலக அறிவு மற்றும் காலத்திற்கேற்ற அரசியல் நிலைமை போன்றவற்றில் அவர்கள் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்தார். இன்று அவர் எம்முடன் இல்லை. இவரை போன்று விடுதலைப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து விழிப்புடன் அடைந்ததும், நோய் வாய்ப்படும் பல போராளிகள் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களின் தாயக விடுதலை வேட்டையை எவராலும் அழித்து விடவோ, மறுத்து விடவோ முடியாது. எங்கள் வாழ்விற்காக உங்களை வருத்திநீங்கள் சிந்திய ரத்தத்தையும், வியர்வையையும் தமிழர் நாம் மறவோம்.

இலக்கு வெல்லும் வரை உங்களது கனவோடு எமது பயணம் தொடரும் என்பதை உறுதியோடு கூறிக்கொள்கிறோம். போராளி தமிழினி மறைவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply