கணவரின் மருத்துவ செலவிற்காக ரூ.5000-க்கு பச்சிளம் குழந்தையை விற்ற தாய்
வறுமை என்பது எந்த அளவுக்கு கொடியது என்பது ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ரூ.5000க்கு விற்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆம், திரிபுராவை சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கணவரின் உயிரை காப்பாற்ற மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால், தன்னுடைய 11 மாத பச்சிளங்குழந்தையை, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு ரூ.5000க்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த தகவல் தற்போது பத்திரிகை செய்தி மூலம் தெரிந்து அம்மாநிலத்தில் பூதாகரமான ஒரு விஷயமாகிவிட்டது. அடுத்த ஆண்டு திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியை சரமாரியாக சாடி வருகின்றனர். அதேசமயம், விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு, அரசு நல காப்பகத்தில் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.