shadow

முரசொலி விழாவில் ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா கமல்?

முரசொலி பவள விழாவில் பேசிய கமல் ‘தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம்’ என்று கமல் பேசியது ரஜினியை குத்திக்காட்டவே என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இதுகுறித்து கமல் மேலும் பேசியதாவது:

‘ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன்.

எதுவும் சொல்ல வந்தால் கையை பிடித்து இழுத்துக் கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது. விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்ற பிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

Leave a Reply