shadow

bf06c996-cb89-469a-8ad8-47811b88ef67_S_secvpf

சருமத்தை சாதாரணம் எண்ணெய்ப்பசை, வறட்சி, சென்சிடிவ் என்று பிரிக்கலாம். இவைகளில் எண்ணெய்ப்பசை மற்றும் வறட்சி சருமத்தினருக்கு தான் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அதில் வறட்சியான சருமத்தினருக்கு குளிர்காலங்களில் அதிகளவிலான பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் முகத்தின் வாயோரப் பகுதியில் தோல் உரிந்து வெள்ளையாக அசிங்கமாக காணப்படுவது. இப்படி தோல் உரிவதற்கு காரணம் போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். அதற்கு தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதோடு, அடிக்கடி சருமத்தின் எண்ணெய் பசையை அதிகரிக்கும் மாஸ்க்குகளைப் போட வேண்டியது அவசியம். இங்கு சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் சில ஃபேஸ் மாஸ்க்குகளை பார்க்கலாம்.

* ஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அந்த மாஸ்க்கில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அற்புத மாற்றங்களை நிகழ்த்தும்.

* சுத்தமான தேங்காய் எண்ணெயில் உள்ள போதுமான அளவு ஃபேட்டி ஆசிட், சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.

* வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து வறட்சியால் தோல் உரிவது தடுக்கப்படும்.

* தினமும் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சரும வறட்சி கட்டுப்படுத்தப்படும்.

* விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சத்துக்கள் உள்ளது. எனவே அத்தகைய எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.

Leave a Reply