டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களுடன் சிசிடிவியும் திருட்டு: அதிர்ச்சி தகவல்

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் மதுபான கடையில் கொள்ளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மர்ம நபர்கள் சிலர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடை ஒன்றின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றனர்

இந்த நிலையில் திருடியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா மூலம் முயற்சித்தபோது சிசிடிவி கேமராவும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த அந்த திருடர்களை எப்படி பிடிப்பது என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply