shadow

Wimal Weerawansaஇலங்கையில் கடந்த ராஜபக்சே ஆட்சியில் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸ அவர்களின் மனைவி ஷஷி வீரவன்ஸ போலி ஆவணக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஷஷி வீரவன்ஸ் பாஸ்போர்ட் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி கடந்த 2010-ம் ஆண்டில் அவர் பெற்றிருந்த பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களும் 2009-ம் ஆண்டில் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த விசாரணைக்காக வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஷஷி வீரவன்ஸவுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். விசாரணையின் முடிவில் அவர் கூறிய விளக்கங்கள் காவல்துறைக்கு திருப்தி இல்லாததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அவர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply