அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்று சென்சார் ஆகவுள்ளதாகவும், வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் இன்று ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட மாட்டாது என சென்சார் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.
‘என்னை அறிந்தால்’ படத்திற்கு முன்பே ஒருசில படங்கள் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் அந்த பணிகள் முடிந்த பின்னர்தான் ‘என்னை அறிந்தால்’ சென்சார் செய்யப்படும் என்று சென்சார் அலுவலகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியானதால், ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் செய்தியை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ‘என்னை அறிந்தால்’ படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி இன்று அல்லது நாளை ‘என்னை அறிந்தால்’ படம் சென்சார் செய்யப்படும் என்றுதான் சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும், படம் கண்டிப்பாக நாளை சென்சார் செய்யப்பட்டு வரும் 29ஆம் தேதி திட்டமிட்டபடி கண்டிப்பாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே கடும் கருத்துமோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.