shadow

vijay and murugadossவிஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிக அதிக வசூலை பெற்று சாதனை படைத்திருந்தாலும், இந்த படம் பல பிரச்சனைகளில் சிக்கி அந்த பிரச்சனைகளில் இருந்து இன்னும் வெளிவர முடியாமல் தவித்து வருகிறது.

கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றம் வரை சென்று போராடி வரும் மீஞ்சுர் கோபிக்கு முதலில் சமூக வலைத்தளங்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்தது. தற்போது ஊடகங்களும் கோபிக்கு ஆதரவாகவும், ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராகவும் குரல் கொடுக்க தொடங்கிவிட்டதால் கத்தி படக்குழுவினர் அதிர்சிச்யில் உள்ளனர்.

கதைத்திருட்டி விவகாரம் தொடர்பாக விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விஜய்யின் தலையும் இந்த விஷயத்தில் உருண்டு வருவதால் இனிமேல் நடிக்கும் படங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இனி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னால் அந்த கதை திருட்டுக்கதையா என்பது தீர விசாரித்து உறுதி செய்தபின்னர்தான் நடிக்க ஒப்புக்கொள்ள இருப்பதாக விஜய் உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முருகதாஸ் மீது தவறு இருக்கலாம் என விஜய் தரப்பு உறுதியாக நம்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இனிமேல் எதிர்காலத்தில் முருகதாஸ் படங்களில் நடிப்பதில்லை என விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply