சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் வெளியான ‘லிங்கா’ படம் ரிலீஸுக்கு முன்பும், ரிலீஸுக்கு பின்பும் பல பிரச்சனைகளை சந்தித்தது என்பதை பார்த்தோம்.
‘இந்நிலையில் ‘லிங்கா’ படத்துக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் அவர் யாருடைய இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் என்பதும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது.
எந்திரன் 2ஆம் பாகத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்றும், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த வரிசையில் இன்னொரு பிரபல இயக்குனரின் பெயரும் அடிபடுகிறது. அவர்தன் பிரபல இயக்குனரும் குஷ்புவின் கணவருமான சுந்தர் சி.
ஏற்கனவே ரஜினி நடிப்பில் அருணாசலம் என்ற படத்தை கடந்த 1997ஆம் ஆண்டு இயக்கிய சுந்தர் சி 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
ரஜினியின் சமீபத்திய படங்களான சிவாஜி, எந்திரன், லிங்கா ஆகியவை அனைத்தும் ஆக்சன் படங்களாகவே இருக்கும் நிலையில் ரஜினி ஒரு மாற்றத்தை விரும்பி தில்லு முல்லு, குருசிஷ்யன், பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து அவர் சுந்தர் சியிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.