shadow

தேசத்துரோகியின் குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன். ஐ.எஸ்.ஐ உளவாளியின் மனைவி அதிரடி
Ijaz
இந்திய ராணுவ ரகசியங்களை சேகரிப்பதற்காக பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடிமகன் போல குடியேறி ஆதார் அட்டை உள்பட அனைத்து ஆவணங்களையும் பெற்று இந்திய பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இஜாஸ் அகமது என்ற பெயரை கொண்ட அவர் சமீபத்தீல் டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இஜாஸ் அகமதுவை திருமணம் செய்து கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவி அஸ்மா என்பவர், ஒரு தேசத்துரோகிக்கு பிறந்த குழந்தையை நான் வளர்க்க மாட்டேன் என்று கூறி குழந்தைக்கு பால் கொடுக்க கூட மறுத்துவிட்டார்.  இஜாஸ் அகமது உடனான திருமணம் மூலம் செய்த தவறை துடைத்தழிக்க முடியாது எனினும் தேச துரோகி ஒருவனின் குழந்தையை வளர்ப்பதன் மூலம் மேலும் நான் பாவம் செய்ய விரும்பவில்லை’ என்று அந்த பெண் கூறியுள்ளார். தற்போது, அந்த குழந்தை,  குழந்தைகள் நல சமிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Chennai Today News: “Will not breastfeed a traitor’s child” – Wife of alleged ISI agent

Leave a Reply