விஜய், சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வசூலை அள்ளிக்குவித்து வரும் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஒருசில இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
நேற்று மாலை சுபாஷ்கரன் அல்லி ராஜா மற்றும் பிரேம் சிவசாமி ஆகிய இருவரும் கொழும்பு பண்டாராநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் இங்கிலாந்து அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்ததால் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறும் அந்த செய்தி, ராஜபக்சேவுடன் லைகா நிறுவனம் நெருக்கமாக இல்லை என்பதற்காக இலங்கை அரசு இந்த கைது நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியா, மற்றும் தமிழக ஊடகங்களில் இதுகுறித்து எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.