விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘சிங்கம்’ இயக்குனர்
இரு வேடங்களில் விஜய் மற்றும் ஸ்ரேயா நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் அவர்களுடன் விஜய் மீண்டும் இணையவுள்ளதாக நேற்று வெளியான செய்தியில் ஒரு சிறு மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது.
பரதன் கூறிய கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த கதைக்கு வேறொரு பிரபல இயக்குனர் திரைக்கதை அமைத்து இயக்க விஜய் முடிவு செய்ததாகவும், இதையடுத்து முன்னணி இயக்குனர்களிடம் இதுகுறித்து பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனால் விஜய்யின் இந்த திட்டத்திற்கு முன்னணி இயக்குனர்கள் தயங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஹரி, பரதனின் கதையை படித்துவிட்டு தான் இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரியின் ‘சிங்கம்’ படத்தில் விஜய் நடிக்கவிருந்து கடைசி நேரத்தில் மிஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்-ஹரி இணையும் இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.