shadow

dhanushபெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களாக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. பிரபல பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு 2.5 ஸ்டார்கள் மட்டுமே கொடுத்துள்ளது. இவ்வளவு குறைவான ஸ்டார்களை சமீபத்தில் எந்த திரைப்படமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் நெகட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காது என்பதால் விநியோகிஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் கவலையில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியுள்ளது.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் தனுஷை மிஞ்சும் அளவுக்கு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் காக்கி சட்டை படம் ஆரம்பிக்கும்போது தனுஷ்-சிவகார்த்திகேயன் இடையே இருந்த நல்லுறவு படம் முடியும்போது இல்லை என்பது ஒருசில சம்பவங்களில் இருந்து வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

இந்நிலையில் காக்கி சட்டை திரைப்படம்வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தனுஷை விட உச்சத்திற்கு சென்றுவிடும் என்று ஊடகங்கள் பில்டப் செய்தன. எனவே தன்னுடைய தயாரிப்பு படம் தோல்வியடைந்து பண நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை, இந்த படம் தோல்வி அடையவேண்டும் என்று தனுஷ் நினைத்ததாகவும், அவர் நினைத்தபடியே தற்போது நடந்துவிட்டதால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இன்று காலை முதல் டுவிட்டரில் வதந்தி பரவி வருகிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருந்தாலும் உண்மையாக இருக்கக்கூடாது என்று நம்புவோம். மீண்டும் தனுஷ்-சிவகார்த்திகேயன் பழையபடி நட்புடன் இருக்க இறைவனை வேண்டுவோம்.

Leave a Reply