shadow

669 சென்னை பூங்காக்களில் வை-பை வசதி. மாநகராட்சி திட்டம்

parkபேருந்துகள், ரயில் நிலையங்கள் உள்பட பல பொது இடங்களில் வை-பை வசதியை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சென்னை பூங்காக்களிலும் வை-பை வசதியை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் ஆனால் பூங்காக்களில் ஏற்படுத்தப்படும் வை-பைக்கு கட்டணம் உண்டா? என்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் தற்போது 669 பூங்காக்கள் உள்ளதாகவும் இதில் பல பூங்காக்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்றுள்ளநிலையிலும் உள்ளதாக கூறிய அதிகாரிகள் இங்கு வரும் மக்களை மேலும் ஈர்க்க 669 பூங்காக்களிலும், வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறினர்.

மேலும் இதுநாள் வரை திரைப்பட படப்பிடிப்புக்கு கட்டணம் எதுவும் பெறப்படவில்லை, இனிமேல் பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூல் செய்யும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் வரும் வருமானத்தை வைத்து பூங்காக்களில் மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply