shadow

அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங்கை சந்தித்தது ஏன்? தம்பித்துரை விளக்கம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அரசியலில் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இன்று மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர்களை தம்பித்துரை தலைமையிலான குழு சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தம்பித்துரை கூறியபோது, ‘தமிழகத்திற்கு நிதி தருமாறு அருண் ஜெட்லியிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் தமிழகத்தில் ஆட்சியும் கட்சியும் ஒன்றாக நன்றாக நடப்பதாக அவரிடம் எடுத்து கூறினோம்.

தமிழக நலனுக்காகவே மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளதாகவும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி பற்றி கோரிக்கை வைத்துள்ளதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும் தம்பித்துரை மேலும் கூறினார்

Leave a Reply