விஜய்-விஷால் மோதலின் பின்னணி காரணம். திடுக்கிடும் தகவல்
நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் சரத்குமாருடன் நேருக்கு நேர் விஷால் மோதுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர் விஜய்யுடனும் மறைமுகமாக மோதி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கும் விஷாலுக்கும் பர்சனால எந்தவிதமான பகையும் இல்லாமல் இருந்தாலும், விஜய்யுடன் அவ்வப்போது விஷால் மோத விரும்புவதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடக்கம்தான் ‘கத்தி’ படத்துடன் தனது ‘பூஜை’ படத்தை விஷால் ரிலீஸ் செய்தது. அதேபோல் ‘புலி’ என விஜய் படத்திற்கு டைட்டில் வைத்த பின்னர் வேண்டுமென்றே தனது படத்திற்கு ‘பாயும் புலி’ என டைட்டில் வைத்தது, ‘புலி’ படத்தின் இசை வெளியான அதே தினத்தில் தனது ‘பாயும் புலி’ படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்தது ஆகியவற்றை உதாரணமாக கோலிவுட்டில் கூறி வருகின்றனர்.
மேலும் பாடல் வெளியீட்டு தினத்தில் விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா, ‘இது வெறும் புலி இல்லடா…பாயும் புலி’ என டுவீட் போட்டதற்கும் விஷாலே காரணம் என கூறப்படுகிறது. விஜய்யை வம்புக்கு இழுத்து அவரோடு மோதினால் தன்னுடைய பெயர் பரபரப்பாக பேசப்படும் என்றும் நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் அது உதவும் என்றும் அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதியான செப்டம்பர் 17 அன்றே தனது பாயும் புலி’ படத்தையும் ரிலீஸ் செய்ய விஷால் உறுதியாக இருந்தாராம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் படத்துடன் மோத விரும்பாமல், விஷால் வற்புறுத்தியும் கேட்காமல் ‘பாயும் புலி’ படத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 4ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளனர். இதனால் விஷால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.