தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னை வளசரவாக்கத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்திற்கு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இளையதளபதி விஜய் நேற்று ரூ.15 லட்சம் இந்த கட்டிடத்திற்கு நிதியுதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன் அவர்களிடம் நடிகர் விஜய் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளதாகவும், அவர் மட்டுமின்றி இயக்குனர் ஏ.எல்.விஜய் உள்பட பலர் நிதியுதவி அளித்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் உதவி இயக்குனர்கள் மற்றும் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வரும் புதியவர்களுக்காக உலகத்தரமான படங்கள் வார இறுதியில் ஒளிபரப்பப்படும் என்றும் இயக்குனர் சங்கம் அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.