உலக நாயகன் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என கமல்ஹாசனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஒத்தி வைப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’ பட ரிலீஸ் காரணமாக கமல் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை சமூக வலைத்தள பயனாளிகள் தற்போது கிளப்பி விட்டுள்ளனர்.
உத்தம வில்லன் ரிலீஸ் தேதியில் விஜய்காந்த் மகன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’ திரைப்படமும் ரிலீஸ் செய்யவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் தியேட்டர் அதிபர்கள் உத்தம வில்லன் படத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இதனால் சகாப்தம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் கமல்ஹாசனிடம் கேப்டன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விஜயகாந்துக்காக கமல்ஹாசன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதகவும் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் ‘உத்தம வில்லன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததற்கு முற்றிலும் தொழில்நுட்ப பணிகள்தான் காரணம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் ஒருசிலர் கிளப்பிவிட்ட வதந்தியால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.