எங்கள் விவசாயிகளுக்காக ஏன் கிரிக்கெட் போட்டி நடத்தவில்லை? விஷாலுக்கு கேள்வி
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்த நடிகர் சங்கம், எங்கள் விவசாயிகள் தற்கொலையால் மடிந்து கொண்டிருந்தபோது அவர்களுக்காக ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தாதது ஏன்? அப்படி ஒரு போட்டி நடத்தினால் எங்கள் விவசாயிகளுக்காக நாங்கள் டிக்கெட் வாங்கி கிரிக்கெட் பார்க்க மாட்டோமா? என்று விஷாலுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் நம்முடைய படம் ஓடாதோ? என்ற பயத்தில் பல நடிகர்கள் வலிய வந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். திரையில் நடிப்பது போல் இங்கும் நடித்து வருகின்றார்கள். எங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, அரசியல் கட்சிகள், நடிகர், நடிகைகள் ஆதரவு இன்றி போராட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்
இவ்வாறு மற்றொரு இளம்பெண் ஒருவர் கேள்வி கேட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.